Paristamil Navigation Paristamil advert login

தென் கொரியாவில் பூனைகளை  கொடூரமாக கொல்லும்  நபர்! பீதியில் மக்கள்

தென் கொரியாவில் பூனைகளை  கொடூரமாக கொல்லும்  நபர்! பீதியில் மக்கள்

24 சித்திரை 2024 புதன் 03:55 | பார்வைகள் : 693


தென் கொரியாவில் மனிதாபிமானமற்ற முறையில் 70க்கும் மேற்பட்ட பூனைகளை கொன்று குவித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

பூனை ஒன்று தனது காரை கீறி சேதப்படுத்தியதனால் மற்ற பூனைகள் மீதும் வெறுப்பு ஏற்பட்டு பூனைகளை கொலை செய்ததாக தெரிவித்துள்ளார்.

சந்தேக நபர் கடந்த டிசம்பர் 2022 முதல் செப்டம்பர் 2023 க்கு இடையில் 70இற்கும் மேற்பட்ட பூனைகளை கொலை செய்துள்ளார்.

குறிப்பாக பூனைகளை கொலை செய்வதற்காக அவர் ஒன்லைன் தளங்களில் இருந்து அவற்றை தத்தெடுத்து பின்னர்  கொலை செய்துள்ளார்.

மேலும் சமீபத்திய ஆண்டுகளில் நாட்டின் மிகக் கொடூரமான விலங்கு கொடுமை வழக்குகளில் ஒன்றாக இது பதிவு செய்யப்பட்டுள்ளது.  

வர்த்தக‌ விளம்பரங்கள்