Paristamil Navigation Paristamil advert login

அதிர்ச்சி கொடுத்த அனுராக் கஷ்யப்!

அதிர்ச்சி கொடுத்த அனுராக் கஷ்யப்!

24 பங்குனி 2024 ஞாயிறு 10:09 | பார்வைகள் : 645


”கிரியேட்டிவ் ஜீனியஸ் என தன்னை நினைத்துக் கொண்டு என்னை சந்திக்க வரும் புதிய நபர்களால் நான் சோர்வடைந்து விட்டேன். அதனால், என்னை சந்திக்க வேண்டும் என்றால் இனி லட்சக்கணக்கில் பணம் கொடுக்க வேண்டும்” என இயக்குநர் அனுராக் கஷ்யப் தெரிவித்துள்ளார். இதுமட்டுமல்லாது அரை மணி நேரம், ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரத்திற்கு எவ்வளவு கட்டணம் என்பதையும் அவர் தெரிவித்துள்ளார்.

பாலிவுட்டின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான அனுராக் கஷ்யப் தன்னை சந்திக்க வரும் புதியவர்களிடம் இனி கட்டணம் நிர்ணயித்து வசூலிக்க இருப்பதாக அதிர்ச்சி கிளப்பியுள்ளார். இதுகுறித்து அவர் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, "புதியவர்களை சந்தித்தும் அவர்களுக்கு உதவியும் நான் சோர்வடைந்து விட்டேன். கிரியேட்டிவ் ஜீனியஸ் எனத் தங்களை நினைத்துக் கொண்டு வரும் புதியவர்களை இனி சந்திக்கக் கூடாது என முடிவெடுத்து இருக்கிறேன்.

இனி யாராவது என்னை சந்திக்க வேண்டும் என விருப்பப்பட்டால், 10-15 நிமிடத்திற்கு ஒரு லட்ச ரூபாயும், அரைமணி நேரத்திற்கு 2 லட்ச ரூபாயும், இரண்டு மணி நேரத்திற்கு 5 லட்ச ரூபாயும் கொடுக்க வேண்டும். மனிதர்களை சந்தித்து, நேரம் வீணடித்து நான் சோர்வடைந்து விட்டேன். இந்தத் தொகையை உங்களால் தர முடியும் என்றால் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள். இல்லை எனில், தள்ளியே இருங்கள்" எனக் கூறியுள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்