Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் காதலியை பார்க்க சென்ற இளைஞனுக்கு நேர்ந்த கதி

இலங்கையில் காதலியை பார்க்க சென்ற இளைஞனுக்கு நேர்ந்த கதி

4 வைகாசி 2024 சனி 16:52 | பார்வைகள் : 536


குளியாபிட்டிய பிரதேசத்தில் வைத்து இளைஞரைக் கடத்த பயன்படுத்திய வேன் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த வேன்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வில்கமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹெட்டிபொல நகரில் இந்த வேன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள்  இந்த வேனை ஹெட்டிபொல நகரில் கைவிட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

குறித்த இளைஞன் கடந்த 22ம் திகதி தனது காதலியைப் பார்ப்பதற்காக காதலியின் வீட்டிற்குச் சென்ற நிலையில் காணமல்போனாக தகவல் வெளியானது.

காதலியின் தந்தை மற்றும் பலர் இணைந்து இளைஞனை வேனில் கடத்திச் சென்று வீடொன்றில் வைத்து அடித்துப் பல மணித்தியாலங்கள் மறைத்து வைத்திருந்தமை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட  விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. 

வர்த்தக‌ விளம்பரங்கள்