Paristamil Navigation Paristamil advert login

காதலனை பாக்கச் சென்றவரை - காத்திருந்து தாக்கிய சிறுவர்கள்!

காதலனை பாக்கச் சென்றவரை - காத்திருந்து தாக்கிய சிறுவர்கள்!

4 வைகாசி 2024 சனி 15:51 | பார்வைகள் : 1829


இணையத்தளமூடாக பழகிய ஆணை உண்மை என நம்பி, நேரில் பார்க்கச் சென்ற ஓரினச் சேர்க்கையாளர் ஒருவர் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். 

Crégy-lès-Meaux (Seine-et- Marne) நகரில் இச்சம்பவம் நேற்று மே 3 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. ஓரினச்சேர்க்கையாளளிடம் பிரபலமாக இருக்கும் GrindR எனும் செயலி ஊடாக ஆண் காதலன் ஒருவரை நபர் ஒருவர் பழக்கம் பிடித்துள்ளார். பின்னர் அவரைச் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டு, நேற்றைய தினம் சந்திப்புக்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆனால், அவர் நினைத்தது எதுவும் நடக்கவில்லை. அவர் எதிர்பார்த்த நபர் எவரும் அங்கு இருக்கவில்லை. அவருக்கு பதிலாக நான்கு சிறுவர்கள் அவருக்காக காத்திருந்தனர்.

குறித்த நபரை தாக்கி, அவரிடம் இருந்து பணம், தொலைபேசி போன்றவற்றை பறித்துக்கொண்டு தப்பி ஓடியுள்ளனர். அதன் பின்னரே அவர் ஏமாற்றப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. 

வர்த்தக‌ விளம்பரங்கள்