Paristamil Navigation Paristamil advert login

கிளிநொச்சியில் தங்கம் கடத்தல் - இரு பெண்கள் உட்பட மூவர் கைது

கிளிநொச்சியில் தங்கம் கடத்தல் - இரு பெண்கள் உட்பட மூவர் கைது

28 சித்திரை 2024 ஞாயிறு 10:24 | பார்வைகள் : 374


கிளிநொச்சி பகுதியில்  கார் ஒன்றில் கடத்திச் செல்லப்பட்ட 4  கிலோ 170 கிராம் தங்க கட்டி மீட்கப்பட்டு,   இரு பெண்கள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் சனிக்கிழமை  (27) பதிவாகியுள்ளது .

யாழ்ப்பாணத்தில் இருந்து ஏ-09 வீதியூடாக வவுனியாவுக்கு காரொன்றில் மேற்படி எடையுடைய தங்கம் கடத்தப்படுவதாக  இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த விசேட தகவல்களின் அடிப்படையிலேயே   , கிளிநொச்சி கந்தசாமி ஆலயத்திற்கு அண்மித்த பகுதியில்  வைத்து விசேட அதிரடிப்படையினரால் குறித்த கைது நடவடிக்கை  மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான  நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது .

வர்த்தக‌ விளம்பரங்கள்