Paristamil Navigation Paristamil advert login

செனகல் நாட்டில் ஓடுபாதையில் விமானம் விபத்து - 11 பேர் படுங்காயம்

செனகல் நாட்டில் ஓடுபாதையில் விமானம் விபத்து - 11 பேர் படுங்காயம்

10 வைகாசி 2024 வெள்ளி 10:34 | பார்வைகள் : 1251


மேற்கு ஆப்பிரிக்க நாடான செனகலில் உள்ள பிரதான விமான நிலையத்தில் 78 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் ஓடுபாதையில் விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

ஏர் செனகல் நிறுவனத்தால் வாடகைக்கு எடுக்கப்பட்ட டிரான்சைர் ஏர்லைனுக்கு சொந்தமான போயிங் 737-300 விமானம் மாலி நாட்டுக்கு புறப்படும் பொது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தை அடுத்து விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. 

இந்த விபத்து தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. 
 

வர்த்தக‌ விளம்பரங்கள்