Paristamil Navigation Paristamil advert login

குழந்தைகள் ஏன் பொய் சொல்கிறார்கள் தெரியுமா..?

குழந்தைகள் ஏன் பொய் சொல்கிறார்கள்  தெரியுமா..?

28 பங்குனி 2024 வியாழன் 13:19 | பார்வைகள் : 826


பொய் காண காரணங்களை கண்டறியவும்: பொதுவாகவே, எல்லா வயதினரும் தங்கள் பெற்றோரிடம் பொய் சொல்கிறார்கள். இருப்பின் சில சமயம் பொற்றோர்களால் அதை சகிக்க முடியாததாக கண்டால் அவற்றை தடுக்க குழந்தைகள் ஏன் பொய் சொல்கிறார்கள் என்பதற்கான காரணங்களை அடையாளம் காண்பது அவசியம்.

மோசமான தண்டனைகளை தவிர்க்கவும்: உங்கள் குழந்தைகள் பொய் சொன்னால் அவர்களை நீங்கள் அடிப்பது, கத்துவது, கோபப்படுவது, ஆக்ரோசமாக நடந்து கொள்வது போன்ற கடுமையான தண்டனையை கொடுப்பதை தவிர்க்கவும். இல்லையெனில், குழந்தைகள் செய்யும் தவறை மறைக்க பொய் சொல்ல வாய்ப்பு அதிகம்.

பாராட்டு பெற: ஒரு உயர்ந்த அந்தஸ்தை பெற அல்லது ஒருவரின் சுயமரியாதையை காப்பாற்ற ஒருவரின் சாதனைகளை பெரிதுப்படுத்த ஒரு பொய் சொல்லலாம். உதாரணமாக, அவர்  விருதை வென்றிருக்காவிட்டாலும் அவர் அதை வென்றதாக கூறலாம்.

கவனத்தை ஈர்க்க: சில குழந்தைகள் மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காகவே, அபத்தமான பொய் கதை சொல்ல வாய்ப்பு அதிகம்.

இதை செய்: உங்கள் குழந்தை சொல்லும் பொய் உண்மை என்று நீங்கள் அறிந்தால், அதைப்பற்றி உங்களுக்கு தெரியும் என்று உங்களுக்கு குழந்தைகளுக்கு சொல்லி நிதானமாய் அவர்களிடம் பேசுங்கள்.

நினைவில் வைத்து கொள்ளுங்கள்: குழந்தைகள் பொய் சொன்னால் அவர்களிடம் அதிகார மோதல்களில் ஈடுபட வேண்டாம், குற்றம் சாட்டும் தொனி அல்லது மொழியை தவிர்க்கவும். ஒருவேளை, நீங்கள் தவறான வார்த்தைகளை பயன்படுத்தினால் நீங்கள் சொல்வதை குழந்தைகள் புறக்கணிக்கின்றனர்.
ஒரு வாய்ப்பு கொடுங்கள்: குழந்தை பொய் சொன்னால் அவர்களை தண்டிப்பதற்கு பதிலாக, இனி அப்படி செய்யாதே என்று சொல்லுங்கள். மேலும் அதற்காக அவர்களை மன்னியுங்கள். குறிப்பாக அவர்கள் திருந்துவதற்கு இரண்டாவது வாய்ப்பு கொடுங்கள்.

முக்கிய குறிப்பு: அதிக கவலை அல்லது மனசோர்வு உள்ள குழந்தைகள் தங்கள் உணர்வுகளைப் பற்றி பொய் சொல்ல வாய்ப்பு அதிகம். எனவே, பெற்றோர்களே கவனமாக இருங்கள்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்